நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Friday 22 October, 2010

குலத்துக்கும், குணத்துக்கும் சம்பந்தம் உண்டா?

ஒருவனுடைய நன்னடத்தை, நல்ல சுபாவம் இவைகளைக் கொண்டே அவன் நல்ல குலத்திலும், நல்ல குடும்பத்திலும் பிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். "அவரை போட்டால், துவரை முளைக்குமா?" என்பர்.
                            ஒரு குருட்டு பிச்சைகாரனை ராஜாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் சேவகர்கள். பிச்சை எடுப்பது குற்றம் என்பது அங்கே சட்டம். அவனை விசாரித்த ராஜா, உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான். 'எனக்கு மாணிக்ககல்லை பரிசோதிக்கத் தெரியும்; குதிரைகளை பரிசோதித்து  நல்ல ஜாதிக் குதிரை தானா என்று சொல்ல முடியும்; மனிதர்களின் தன்மையை அறிந்து, அவர்கள் நல்ல குலத்தை சேர்ந்தவர்களா என்பதையும் சொல்லமுடியும்!" என்றான் பிச்சைக்காரன்.
                              'சரி! இவனுக்கு தினமும் ஒரு பட்டை சோறு கொடுத்து, சிறையில் வையுங்கள்!' என்று உத்தரவிட்டான் ராஜா. ஒரு நாள் மாணிக்ககல் கொண்டு வந்தான் இரத்தின வியாபாரி ஒருவன். அந்தக் குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. தன் காதுகளில் கல்லை வைத்துப் பார்த்து விட்டு, "இது மாணிக்ககல் அல்ல! இது ஒரு பூச்சிக் கூடு !" என்றான் குருடன். வியாபாரி போனபின் இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா." மாணிக்கல்லானால் காதில் வைத்தால் ஓசை எதுவும் வராது; பூச்சிக் கூடானதால் காதில் வைத்ததும் 'ஞொய்' என்ற சப்தம் வந்தது, அதனால் கண்டுபிடித்தேன்... என்றான் குருடன். 'சபாஷ்! தினமும் இவனுக்கு இரண்டு பட்டை சோறு கொடு..' என்று உத்தரவிட்டான் ராஜா.
                             மற்றொரு நாள், ஒரு அழகிய குதிரையை கொண்டு வந்தான் குதிரை வியாபாரி ஒருவன். குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. குதிரையின் முதுகில் கைவைத்த குருடன், 'இது அசல் ஜாதிக் குதிரை அல்ல......' என்றான். இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா.ஜாதிக் குதிரையானால், முதுகில் கைவைத்ததும் உடலை சிலிர்க்கும். இது சொரணையே இல்லாமலிருந்தது. அதனால் கண்டுபிடித்தேன்!' என்றான். சபாஷ்! தினமும் இவனுக்கு மூன்று  பட்டை சோறுகொடுங்கள்! என்றான் ராஜா. பிறகு ஒரு நாள், குருடனிடம், தான் எப்படிப் பட்டவன் என்பதை சொல்லும்படிக் கேட்டான் ராஜா. 'மகாராஜா நான் சொல்வேன்! ஆனால்..நீங்கள் கோபப்படக்கூடாது...' என்றான் குருடன். ராஜாவும் சரி என்றான்.மகாராஜா நீங்கள் ஒரு சமையல் காரருக்கு பிறந்தவர்; ராஜாவுக்குப் பிறக்கவில்லை. கோபிக்ககூடாது!" என்றான் பயந்து கொண்டே. நேராக தன் தாயிடம் போய் விசாரித்தான் ராஜா. அரண்மனை சமையல்காரனுக்கு இவன் பிறந்ததாக தெரிந்து கொண்டான்.
                                                     குருடனிடம் வந்து 'உண்மை தான்! இதை நீ எப்படி தெரிந்து கொண்டாய்?' என்று கேட்டான் ராஜா. ஒ அதுவா! ராஜாவுக்குப் பிறந்து, ராஜவம்சத்தில் பிறந்தவன், பிறரைப் புகழ்ந்து பரிசளிப்பதானால், பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்பான்; நீங்கள் எப்போது பார்த்தாலும்,
ஒரு பட்டை சோறு,இரண்டு பட்டை சோறு,மூன்று பட்டை சோறு' என்று பட்டை சோறாகவே பரிசளித்தீர்கள். சமையல்காரனுக்குத் தான் பட்டை சோறு ஞாபகம் வரும்; அதனால், நீங்கள் சமையல்காரன் மகனாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்!' என்றான். ராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குருடனுக்கு வெளியூரில் வசதியாக வாழ, வழி செய்து அனுப்பி வைத்தான்.
                                                 குலத்தையும், குடும்பத்தையும்  பொருத்துத் தான் பிள்ளைகளும் இருப்பர்' என்பதைச் சொல்ல இப்படி ஒரு கதை உண்டு.ஒரு சில விதி விலக்கும் இருக்கலாம். அனுபவத்தில் கானவேண்டியவை இவை! பக்தியும், ஆசாரமும் உள்ள குடும்பத்தில் அதற்கேற்ற பிள்ளை!. தன்னுடைய ஊழ்வினைக்கேர்ப்பவே பிள்ளைகளும் அமையும்.

1 comment:

Asiya Omar said...

ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்,என்னடா நம்ம ப்ளாக்கிற்கு வந்துவிட்டோமோன்னு,அப்ப தான் டெம்ப்லேட் ஒரே போல் இருப்பதை கவனித்தேன்.கதை நல்லாயிருக்கு.

Post a Comment