நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Saturday 22 May, 2010

சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.

1 comment:

Thilaga. S said...

சாரதா தேவியாரின் வார்த்தைகள் அத்தனையும் அற்புதம்..
படைப்புக்கு நன்றி..

Post a Comment