நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்
Tuesday 31 August, 2010
ஆன்மீக சாதனை
படிப்பதும், பணம் சம்பாதிப்பதும், பதவிக்கு செல்வதும், வீடு கட்டுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே. புற வாழ்க்கை வசதிகளை பெறுவதற்காக பணம் சம்பாதிக்கும் வழிகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்வது இல்லை. நம்மை பற்றி நமக்கே தெரிவதில்லை.
ஆன்மிகம் பேசும் பலருக்கு ஆன்மீகத்துக்கான அர்த்தம் தெரிவதில்லை. ஆன்மிகம் என்றால் ஆன்மா, என்னை பற்றி, நான் யார், என் லட்சணம் என்ன? என அறிவதே ஆன்மிகம். அதற்கான கல்வியே ஆன்மீக கல்வி.எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது வந்து விடுவது இல்லை. மகிழ்ச்சி, இன்பம்,பேரின்பம் என்ற மூன்று நிலைகளில் வாழ்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்வதே ஆன்மீக சாதனையாக கருதப்படும்.
மகிழ்ச்சியாக வாழ உடல் நல, ஆரோக்கியம் மிக முக்கியம். ஆன்மீக சாதனையில் முதலிடத்தில் இருப்பது உடல் நலம். பல பேருக்கு உடம்பின் மதிப்பு தெரிவதில்லை. கடவுளின் அற்புதப் படைப்பு மனித உடல். உடலுக்குள் இயங்கும் உறுப்புகள், அவயங்கள் மதிப்பு மிக்கவை. உடல் உறுப்புகள் பாதிப்படையும், பொது அதன் அருமை தெரிகிறது. உடல் நலமில்லாதவன்
அவனுக்கே சுமையாக தெரிகிறான். குடும்பத்தாருக்கும் சுமையாக உள்ளான். சமுதாயத்திற்கும் சுமையாக கருதப்படுகிறான். உடல் நோயை அறிவுள்ள செய்கைகளால் தீர்த்துக் கொள்ள முடியும். உடல்நலதுக்கான
கல்வியை பெற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும். நோய்கள் மனிதனின் மகிழ்ச்சியை கெடுத்து விடுகின்றன. வாழ்கையில் வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே இன்பத்தை தராது; மன ஆரோக்கியமே இன்பம் தரும். கர்வம், சுயநலம், பற்று, பேராசை, வெறுப்பு, கோபம், பொறாமை போன்றவற்றால் மன ஆரோக்கியம் கெடுகிறது. இதனால், உள்ளத்துக்குள் எப்போதும் ஒரு கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. மனதை அமைதியாக இருக்க இவை விடுவது இல்லை.
மன அழுக்கு, தீய உணர்வு, கறைகள், தீய எண்ணங்கள், இன்பத்துக்கு தடையாக உள்ளன. ஞானத்துக்கு செல்ல விடாமல் தடுக்கின்றன. தியானத்தால் மனம் அமைதி அடைந்து, தன்னை பற்றி ஆய்வு நடக்கும் போது ஆன்மீக சாதனை துவங்கி விடும். எத்தனை கோவிலுக்கு சென்றாலும், சடங்குகளை செய்தாலும் தன்னை உணராத வரை ஆன்மீக சாதனை துவங்காது. தியானத்தில் வெற்றி பெற்று, ஞானம் பெற தகுதியானவராக நாம் மாற வேண்டும். இதற்காக இல்லறத்தை விட்டு ஓட வேண்டாம். இல்லறத்தில் இருந்து கொண்டே தர்மத்தின் வழி சென்று ஆன்மீக சாதனைகளை செய்ய முடியும். இல்லறம், துறவறம் இரண்டுமே உயர்ந்த தர்மங்களை கொண்டிருகின்றன.
குணங்களுக்கு அடிமையாகாமல் விடுதலை பெறுவதே பேரின்பம். நான் என்பது இந்த உடல் அல்ல. உடலை வீடாக கொண்டு வசிக்கிற உயிர். எண்ணங்களின் தொகுப்பாக உள்ள மனம் ஒரு கருவி. இக்கருவியை பயன்படுத்தி உலகத்தை அறிவதே ஆன்மீக சாதனை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆன்மீக கருத்துக்களை மிக அற்புதமாக எழுதியிருக்கிங்க. ஆழமாக சிந்திக்க வைக்கிறது உங்களின் எழுத்துக்கள்.
Post a Comment