நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Friday 17 September, 2010

எது உண்மையான சுகம்?

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான் என்பது தெரியும். இந்த வாழ்நாளை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அதற்கு தகுந்த படி வாழ்க்கையை  அமைத்துக் கொள்ள வேண்டும்.
                                எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதை பெரியோர் கூறியிருகின்றனர். தனக்கு தேவையானதை தார்மீக முறையில் சம்பாதிக்க வேண்டும். குடும்ப தேவை, தெய்வீக காரியங்கள், சொந்த பந்தங்களுக்கு உதவி செய்தல், ஓரளவு தான, தர்மம் செய்தல், போதுமே என்கிற திருப்தி....இப்படி வாழ்க்கை நடத்தினால் இகத்துக்கும் சுகம், பரத்துக்கும் சுகம் என்றனர். இப்படி இருக்க முடியா என்பது தான் பிரச்னை.
                           முதலாவதாக 'இது போதும்!..., என்ற எண்ணம் வருகிறதா? பணம், பொருள் என்று வரும் போது, ' இது போதும்... இனி வேண்டாம்....'   என்ற பேச்சே இருப்பதில்லை. வேலைக்குப் போனால் சம்பளம் போதாது. வாடகை வீடென்றால், சொந்தவீடிற்கு ஆசை; சொந்த வீடு இருந்தால், இன்னும் கொஞ்சம் பெரிய வீடு மேல் ஆசை; பெரிய வீடாக இருந்தால், மாடி வீடாக இருந்தால் வாடகைக்கு விடலாமே என்ற ஆசை.
                                  சைக்கிள் மேல் ஆசை. பிறகு ஸ்கூட்டர், கார் இப்படி ஒவோவேன்றாக ஒவ்வொவென்றாக ஆசை! இதற்கு வரம்பே கிடையாது. ' ஆமாம் சார்....ஏதோ இருக்கறதை வெச்சுக்குட்டு இதுவே போதும்னு உட்கார்ந்திருந்தால் அது என்ன வாழ்க்கை.. சார். இந்த வாழ்நாளில் நாலு பேரைப் போல் நாமும் நிறைய சம்பாதித்து, நன்றாக அனுபவிக்க வேண்டாமா... அப்படி ஆசை இராதா?' என்று கேட்கின்றனர். ஆனால், வாழ்கையில் எது சுகம், நிம்மதிஎன்பதை கொஞ்சம்  சிந்தித்துப் பார்த்தால் புரியும். நிறைய பணம் இருந்தாலும் திருடர் பயம், வருமான வரி பயம்; கடன் கொடுத்திருந்தாலும் வருமோ, வராதோ என்ற பயம்; இதுவும் தவிர, யாரவது சொந்தங்கள் உதவி கேட்டு வந்து விடுவாரோ என்ற பயம்.
                                             பின்னே சேர்த்து வைத்ததை என்ன தான் செய்வது? என்ன செய்தால் திருப்தி, நிம்மதி ஏற்படும்? ஓரளவு பொருள் சேர்க்க வேண்டியது. குடும்பத்தை ஒழுங்காக நடத்தி, அதற்காக செலவிடுவது, பிறருக்கு உதவுவது, தன இகலோக சுகத்துக்கு செலவிடுவதைப் போல, பரலோக சுகத்துக்கும் ஏதாவது செய்து கொள்வது நன்மை தரும் என்றனர்.பரலோக சுகத்துக்கும் என்ன செய்ய வேண்டும்? தான, தர்மம் தான் வழி!
பெரியோர் சொன்னதையும் கேட்டு, புராணங்களில் சொல்லி இருப்பதையும்  நம்பித் தான், தனக்கான தான, தர்மங்களுக்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
                      இதற்கு மனசு வராமல் போனால், உறவினர்கள் போன்றவர்களால் அந்தப் பணம் அழியத் தான் போகிறது. ஆளுக்கு கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் அங்கே என்ன இருக்கும். சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் இருக்கும். இதற்காகவா இதனை பாடு பட்டு சேர்த்து வைத்தது!......
கடமைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதும். பரலோகத்துக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம். மறக்கக் கூடாது, இப்படி வாழலாமே!..என்றனர் மகான்கள். நமக்கு அது புரிய வேண்டுமே!

2 comments:

Asiya Omar said...

அருமையான பகிர்வு.சகோ.தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.நான் உங்கள் ப்ளாக் வந்து பார்க்கணும்னு நினைப்பதுண்டு.ஆனால் கொஞ்ச நாட்களாக வரமுடியாமலே போய்விட்டது.தமிழ்மணம் ,தமிலிஷ் இண்ட்லியில் சேருங்க,பதிவர்கள் வரவு அதிகமாகும்.

Riyas said...

அருமையான கருத்துக்கள்..

Post a Comment