* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.
* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்
களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.
* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம்
தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும்
கடைபிடிக்க வேண்டும்.
* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்
புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச்
செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.
வள்ளலார்
(இன்று வள்ளலார் அவதரித்த தினம்)
2 comments:
அன்பே சிவம்..
ஜீவகாருண்ய ஒழுக்கம் சாப்பாடு போடுவதல்ல!
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_27.html
Post a Comment