நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Thursday 9 September, 2010

அகம் பாவம், தற்பெருமை கூடாது!

பூர்வ ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை பொறுத்து, தன் வாழ்நாளில் சில நல்ல காரியங்களை செய்து பெயரும், புகழும் பெறுகிறான் மனிதன். ஒருவன் எவ்வளவோ தான, தர்மங்களை செய்யலாம் ; பரோபகாரியாக இருக்கலாம்.இதெல்லாம் அவனுக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ஆனால், தான் செய்துள்ள தான, தர்மங்களைப் பற்றி பிறரிடம் தானே, பெருமையாகப் பேசிக் கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொள்வது, அவன் செய்துள்ள தான, தர்மத்தின் பலனை கெடுத்து விடும்.
யயாதி என்ற சக்கரவர்த்தி, பூலோகத்திலும், தேவலோகத்திலும் புகழ் பெற்றவன்; பல யாகங்களை செய்தவன்; சாதுக்களை ஆதரித்தவன். கடைசிக் காலத்தில் ராஜ்யத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்து முக்தி பெற்றான். தேவலோகத்தில் இந்திரனாலும், தேவர்களாலும் கவுரவிக்கப் பட்டான்.ஒரு தேவ விமானத்தை யயாதிக்கு அளித்து, "உன் இஷ்டம் போல் எந்த புன்னியலோகதுக்கும் இதன் மூலம் செல்லலாம். தேவலோக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்..' என்றான் தேவேந்திரன்.
                                                                                         யயாதியும் அந்த விமானத்தில் ஏறி,எல்லா புன்னியலோகங்களுக்கும் சென்று, எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருந்தான். எல்லா புன்னியசாலிகளுக்கும் மேம்பட்டவன் தான் தான்' என எண்ணிக் கொண்டான். யயாதியிடம் அகம்பாவம் ஏற்பட்டிருப்பதை அறிந்த தேவேந்திரன்,' ஒ யயாதியே... நீ எல்லா கர்மங்களை குறைவின்றி பூர்த்தி செய்து , இல்லறத்தை துறந்து, தவம் செய்து புன்னியலோகங்களை ஜெயித்தாய். "தவத்தில் நீ யாருக்கு ஒப்பானவன்?" என்று கேட்டான்.யயாதிக்கு தற்பெருமை தலை தூக்கியது.
                                                                                         'இந்திரனே, தேவர்களிலும், மனிதர்களிலும், கந்தவர்களிலும், ரிஷிகளிலும் தவத்தில் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே கிடையாது'....என்றான். உடனே இந்திரன் ,'' ராஜனே.. சமமானவர்களையும், மேலானவர்களையும், அவர்களின் மகிமையை அறியாமலே நீ அவமதித்துப் பேசி விட்டாய், உன் அகம் பாவம் உன் புண்ணியத்தை அழித்து விட்டது.... நீ இப்போதே கீழே தள்ளப் பட்டு விழுவாய்..." என்றான். தன் தவற்றை உணர்ந்த யயாதி, தண்டனையை ஏற்கத் தயாரானான். இந்திரனைப் பார்த்து,' நான் அகம்பாவத்தால், அவர்களை நான் அவமதித்தால் எனக்கு புன்னியலோகங்கள் நஷ்டமாகிறது. நான் தேவலோகத்தை விட்டு கீழே விழும் போது, 'சாதுக்களின் நடுவே விழும்படியாக செய்வாயாக..' என்று வேண்டிக் கொண்டான்.
                                                                                         அதேபோல், பூலோகத்தில் கங்கை நதி தீர்த்தத்தில் சாதுக்கள் யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில விழுந்து, சாதுக்களின் தரிசனம் பெற்றான் யயாதி. அவனது பெண் மகா தபஸ்வி. அவள் தன புண்ணியம் அனைத்தும் யயாதிக்கு அளித்தாள். அதன் பலனாக மீம்டும் தேவவிமானத்தில் புன்னியலோகம் சென்றான் யயாதி. நல்ல காரியங்களை செய். புண்ணியம் சம்பாதித்துக் கொள். புன்னியலோகங்களை ஜெயித்துக்கொள். அனால், தற்பெருமையும், அகம்பாவமும் வேண்டாம். இவைகளை விட்டு விட்டால், ஒருவன் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.

2 comments:

Chitra said...

புன்னியலோகங்களை ஜெயித்துக்கொள். அனால், தற்பெருமையும், அகம்பாவமும் வேண்டாம். இவைகளை விட்டு விட்டால், ஒருவன் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.


....நல்ல கருத்தை ஆன்மீக செய்தியுடன் கூறி இருப்பது அருமை.

jagadeesh said...

வருகைக்கு மிக்க நன்றி சித்ரா!

Post a Comment