நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Saturday 5 June, 2010

பக்தியை பெருக்குங்கள்!


தராசு முள்ள நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரன்டு தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுக்களில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நேராக நிற்காமல் அந்த பக்கமும் இந்த பக்கமும் தராசு முள் ஆடிக்கொண்டே இருக்கும்.

அதுபோல
, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்ற தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும். ஒரு தட்டில் ஆசைகள் அனைத்தையும் வைத்து, மற்ற்றொரு தட்டில் பக்தியை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற வ்சயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசையை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.
சரணடைந்தவர்களை அவன் விட்டுவிடுவதில்லை; கை தூக்கி விடுகிறான், பக்தி செய்து சரணடைந்தால் முக்தி அளிக்கிறான்.

நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப்பிறவி புதிதாக முதன்முதலாக கிடைத்ததல்ல; இதற்குமுன் எத்தனையோ பிறவி எடுத்தாகிவிட்டது; ஆத்மா அழிவற்றது. அது, மேலும் , கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது. இப்படி புண்ணிய பலன் கூடுதலாக கூடுதலாக பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்த்திருந்தால், இந்த ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு! புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் வேண்டும். சில சமயம் மனம் அதில் ஈடுபடாது. வேறு எதிலோ தான் ஈடுபடும்.

புண்ணிய
காரியம் என்றால், தான-தர்மங்கள் செய்வது மட்டும்மல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம்இவைக்களுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்களின் தரிசனம் பெரிய புண்ணியம்.நாம் இப்போது மனித பிறவியை எடுத்துள்ளோம், இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்.மஹா புருஷர்களை சந்தித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை தரிசித்திருக்கலாம். வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியாவிட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப்பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என யூகிக்கலாம்.


அதே போல, இந்த ஜென்மாவிலும் இப்போது உள்ள மகான்களை தரிசித்து வணங்கிவிட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பானதாக இருக்கும். உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மாயம், எல்லாமே பரம்பொருள் என எண்ணுகின்ற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஞ்சியத்தை அடையமுடியும்.
இப்போது அதன் எல்லைக்கோடு வரையாவது போக முடியுமா என்பது தான் என் கேள்வி?

1 comment:

தோழி said...

// இப்போது அதன் எல்லைக்கோடு வரையாவது போக முடியுமா என்பது தான் என் கேள்வி? ///

ஏன் முடியாது? ஞானிகள், சித்தர்கள் எல்லோரும் எம்மை போல பிறந்து தான் இந்த நிலையை அடைந்தார்கள்; ஆகவே, விடமுயர்ச்சியும் போகும் பாதையில் தெளிவும் இருந்தால் யாராலும் முடியும்...

Post a Comment