நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday 6 June, 2010

கோலம் போடுவது ஏன்?


நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே தெய்வீகம் இருப்பதாக நம்பினார் நம் முன்னோர். வாழ்கையில் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒருவித தெய்விக தொடர்பு இருக்கும்படி வாழ்ந்தனர். எல்லா பொருட்களிலும் இறைவன் இருப்பதாக நம்பினார்.சொல்லிலும், செயலிலும் தெய்வத் தொடர்பு இருந்தது.

எதையோ படித்து வெட்டியாய் பொழுது போக்காமல்,நீதி நெறிகளை தெரிந்து கொள்ளவும், பண்பாடுகளை அறிந்து கொள்ளவும்,
வாழ்வின் தரத்தை உயர்த்தி கொள்ளவும், புராணங்கள், திருமறைகள், திவ்ய பிரபந்தம் போன்ற வற்றைப் படித்தனர். பெரியோர் மூலம் அதன் பொருளை அறிந்தனர். நம்மோடு தெய்வத்தையும் பிணைத்து வைத்திருக்கின்றனர். காலையில் வாசல் தெளித்து, பெறுக்கி, கோலமிடுகிற வழக்கம் உண்டு. அப்படி செய்கிற வீடுகளுக்கு மகாலட்சுமி வருவாள்.

கோலமிடுவது வாசலுக்கு அழகு செய்வது மட்டுமல்ல. மங்களகரமானதும் கூட என்பது என் கொள்கை, எந்த நல்ல காரியமானாலும் கோலம் இல்லாமலிராது. இதில் விதவிதமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் கோலமிடுவது, தனிக்கலை. இந்தக் களையும் வளருகிறது. இது தவிர குனித்து, நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாறியும் ஆகிறது. மேற்குறித்த காரியங்களில் தெய்வம், கலை, உடல்நலம், சுத்தம் ஆகியவை அடங்கியுள்ளது. இதெல்லாம் நன்மைக்குத்தானே!

சூரியனை வழிபடுகிறோம்; பொங்கல் பண்டிகையின் போது சூரிய நாராயணனை வழி படுகிறோம். புத்தாடை அணித்து பொங்கல் செய்து படைக்கிறோம். புது நெல் அறுவடை ஆகி, வீட்டுக்கு வருகிறது. இதில் நமக்கு ஆடைகளும், விருந்து சாப்பாடும் கிடைகிறது. அதே சமயம், தெய்வ வழிபாடும் உள்ளது.

வீட்டு நிலைப்படி இருக்கிறது. அதற்கு, மஞ்சள் பூசி, பொட்டு வைத்து அழகுபடுதுகிறோம். மாவிலை தோரணம் கட்டுகிறோம். நிலைப்படிகளில் ஒருத்தி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்யும் பொது, நிலைப்படிக்கு பூஜை செய்வதை பாக்கலாம். இது அழகு செய்வதோடு மட்டுமில்லாமல், ஒரு தெய்வ வழிபாடும் உள்ளது.

வீடுகளில் பசு மாடு வைத்து பூஜிப்பர். பசுவின் உடலில் பல தேவதைகள் இருக்கின்றனர். பசுவிடமிருந்து பால், தயிர், வெண்ணை எல்லாம் நமக்கு கிடைக்கிறது. பசுவுக்கு பூஜை செய்கிறோம்; வழிபடுகிறோம்; பசுவின் காப்பதில் நமக்கு ஆதாயம் உள்ளது; அதே சமயம் தெய்வ வழிபாடும் நடக்கிறது. வாழ்க்கையோடு தெய்வமும் இணைத்திருக்கிறது. ஆலயம் என்றால் கலை, தெய்வம் இரண்டும் சேர்ந்துள்ள இடமாகிறது, இங்கே பக்தியும் வளருகிறது! நன்றி!

No comments:

Post a Comment