நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Saturday 5 June, 2010

கடவுள் பக்தி இல்லாதவரா நீங்கள்?


னிதன் முயற்சி செய்து சோர்ந்து போன சமயம்,' தெய்வமேஆக, கடைசி நேரத்திலாவது தெய்வத்தை நினைக்க வேண்டியுள்ளது. அவனிடம் சரணடைய வேண்டியுள்ளது. இதெல்லாம் வேதாந்தம் சார், நமக்கு புரியாது... என்பவரும் உண்டு!
அனால் அதில் முழுமையாக இறங்கும் பொது, உண்மை புலப்படும், மனது தெளிவு பெரும். "மனத்தெளிவு ஏற்பட்டு, இந்த உலகமும், அதில் உள்ள யாவுமே பரபிரம்மம்" தான் என்ற உண்மை நிலை உணர்த்துவதே முக்திக்கு வழி. வாழ்நாளில் சிறிதளவாவது 'தெய்வ சிந்தனை இருப்பது நல்லது', என்பது பெரியோர் வாக்கு.
ஏதாவது பாவத்தை மனிதன் செய்துகொண்டே தான் இருக்கிறான். எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்து புண்ணிய காரியங்களையே செய்து வந்தாலும், எதாவது பாவத்தை செய்ய நேரிடுகிறது. பாவம் என்பது 'மனதாலோ, வாக்கலோ, இந்திரியங்கலாலோ' எதோ ஒன்றால் செய்யப்பட்டு வருகிறது.
ஒருவரை பற்றி தவறாக எண்ணி விடுகிறோம்; ஒருவரை கடுமையாக தூசித்து விடுகிறோம்; ஒரு ஜீவனுக்கு இம்சை செய்து விடுகிறோம்... இப்படி ஏதாவது ஒன்றால், ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம். இது இயற்கை!
இப்படி மனிதனிடம் சில பாவங்கள், தோஷங்கள் இருக்கின்றன. அனாலும், இப்படிப்பட்டவர்களுக்கு கருணை காட்டுகிறான் பகவான்!எப்படியாவது மனிதன் திருந்தி, பக்தனாகி தன்னை வந்தைடயாட்டும்' என்பது அவன் எண்ணம்.
சிலருக்கு தெய்வ பக்தி இருக்காது; ஆனாலும் 'நேர்மை, நீதி, கருணை, அன்பு, தயை' போன்ற குணங்கள் இருக்கும். இந்த குணங்களும் இறைவன் தான் என சொல்லபடுகிறது. இந்த குணங்கள் உள்ளவனிடமும் இறைவன் இருக்கிறான். கடவுள் என்பது பரமாத்மா; உயிர்கள் என்பது ஜீவாத்மா;இந்த பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றாகவேண்டும்: அது தான் முக்தி என்றனர்.
பரமாத்மாவாகிய தன்னை ஜீவாத்மா வந்தைடைவதற்கான உபாயங்களை சொல்லிருகின்றனர். பரமாத்மாவே வந்து ஜீவாத்மாகளை கை தூக்கி விடுவது பக்தர்கள் விஷயத்தில் நடக்கலாம்; மற்றவர்கள், தாங்களாகவே முயற்சி செய்து தான் அவனை அடைய வேண்டும்.
பக்தி, பிரபத்தி தான் உபாயம் என்றனர். பகவானை பக்தி செய்து, அவனே கதி என்று அவனையே சரணடைந்துவிட்டால், அவன் அழைத்து கொள்வான், இரண்டும் ஒன்றாகி விடும்.இப்படியாக, ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகிவிட்டால், துணை' என்கிறான்.
அவன் பிறவி கடலை கடந்து, பகவானோடு கலந்து விடுகிறான்.

4 comments:

Thilaga. S said...

wonderful post..
Thanks for sharing..

(plz give space between paragraphs)

jagadeesh said...

Thankyou very much.

Balaji Palamadai said...

ur blog is very nice..keep up the good work :-)

jagadeesh said...

Thanks balaji

Post a Comment